ADDED : ஜூன் 07, 2024 11:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணத்தை மடியில் கட்டிக் கொண்டு இருட்டில் நடந்தான் பீட்டர். மழை பெய்யவே ஓரிடத்தில் ஒதுங்கினான். அது கல்லறை. அங்கிருந்த சமாதி ஒன்றில் இருந்து ஒருகை வெளிப்பட்டது.
அப்போது அசரீரியாக 'பணம்... பணம்...' எனக் கேட்டது. தன்னிடம் இருந்த பணத்தை அந்த கையில் வைத்தான். உள்ளே இழுத்துக் கொண்டது. இப்படியே பலமுறை தொடர்ந்தது. கடைசியாக எத்தனை முறை வைத்தாலும் கை உள்ளே போகவில்லை. தன்னிடம் இருந்த பணம், நாணயங்களை முழுவதுமாக கொட்டினான். கை அப்படியே இழுத்துக் கொண்டது.
அந்த கைக்கு உரிய நபர் யார் தெரியுமா... லஞ்சத்தில் புரண்டவர். இறப்புக்குப் பின்னும் கூட அவரது இயல்பு மாறவில்லை.

