நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மார்ச், செப்டம்பரில் 21, 22, 23 ஆகிய நாட்களில் சுவாமி மீது சூரியஒளி படுவது பார்க்க வேண்டிய ஒன்று
* சிவன் கோயில்களில் கருவறைக்குப் பின் லிங்கோத்பவர் சன்னதி இருக்கும். ஆனால் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார்.
* சங்கரலிங்க சுவாமியை பாம்புச்சாமி என்றும், திருச்செந்துார் முருகப்பெருமானை உப்புச்சாமி என ஆங்கிலேயர் அழைத்தனர்.
* கோமதி சன்னதியில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
* எமபயத்தை போக்கும் துர்கையம்மன் தெற்கு திசை நோக்கி இருக்கிறாள்.
* திங்கள் அன்று பூப்பாவாடையிலும், வெள்ளி அன்று தங்கப்பாவாடையிலும் அம்மனை தரிசிக்கலாம்.
* இங்கு சித்திரை திருவிழா 48 நாட்கள் நடைபெறும்.
* இந்தக் கோயிலுக்கு பின்புறத்தில் பாம்பாட்டி சித்தரின் பீடம் உள்ளது