/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
/
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
ADDED : டிச 23, 2016 10:53 AM

* கடவுளின் திருவடியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அனைத்து பிரச்னைகளையும் அவரிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர் நடத்தும் நாடகத்தில் நாமெல்லாம் வெறும் நடிகர்கள்.
* கடிகாரத்தின் முட்கள் 'டிக் டிக்' என்று தொடர்ந்து ஒலிப்பது போல எப்போதும் கடவுளின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்து வாருங்கள். எல்லா நன்மையும் கிடைக்கப் பெறுவீர்கள்.
* ஜபிப்பதற்கு காலை, மாலை இரண்டுமே ஏற்ற நேரங்கள். நேரம் எதுவாக இருந்தாலும் மனம் ஒன்றி ஜபிப்பது அவசியம். ஒருநாள் கூட ஜபம் செய்யாமல் இருப்பது கூடாது.
* தூய்மையான மனம் படைத்தவர்கள் உலகிலுள்ள அனைத்தையும் தூய்மையாகவே பார்க்கிறார்கள். அவர்கள் சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.
* வாழ்வில் கஷ்டங்கள் வந்தாலும் அவை நீடித்துக் கொண்டிருப்பதில்லை. அவை பாலத்தின் அடியில் ஓடும் நீரைப் போல ஓடி மறைந்து விடும்.
* யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
* சாதாரண மனிதன் இந்த உலகை விட்டுச் செல்லும் போது அழுகிறான். ஆனால், மகான்கள் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
* உண்மையான துறவிக்கு மட்டுமே பணத்தின் மீதுள்ள ஆசையை வெல்லும் சக்தி இருக்கிறது. மற்றவர்களை எல்லாம் பணம் ஆட்டிப் படைக்கிறது.
* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள். சுற்றியுள்ள மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு துணை நில்லுங்கள்.
* உலகில் கடவுள் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பொய். இந்த உண்மையை மனிதன் உணர்ந்து கொண்டால், அவனுக்கு மகிழ்ச்சி தவிர வேறு ஏதுமில்லை.
* எப்போதும் சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபடுங்கள். முயற்சி இல்லாமல் உலகில் எதுவும் நடப்பதில்லை.
* துன்பம் என்பதும் கடவுளின் பிரசாதம். அதுவும் உங்களை நல்வழிப்படுத்தவே கடவுளால் அளிக்கப்பட்டிருக்கிறது.
* நட்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. சமயத்தில் எச்சரித்து திருத்தும் கடமையும் உண்மையான நட்புக்கு இருக்கிறது.
* கல்வியால் மனிதன் தானும் மேன்மை அடையலாம். மற்றவர்களையும் மேன்மை அடையச் செய்யலாம்.
* மனதை அடக்கப் பழகுங்கள். பிறரது அந்தரங்கம் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாதீர்கள்.
* கடவுள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். அறிவைக் கொண்டு அவரை அளக்க முற்படாதீர்கள்.
* மதம் பிடித்த யானையைப் போல மனம் செயல்படுகிறது. தியானத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.
சொல்கிறார் சாரதாதேவியார்

