/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
தேசத்தின் மீது பாசம் செலுத்துங்கள்!
/
தேசத்தின் மீது பாசம் செலுத்துங்கள்!
ADDED : நவ 18, 2016 12:25 PM

* நாடு, மொழி, இனம், பொருளாதார நிலை இவற்றிற்கு தீங்கு நேரும் வகையில், எந்த சூழ்நிலையிலும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடாதீர்கள்.
* மனிதர்கள் அறைகளில் வசிப்பதைப்போல, கடவுளும் ஒவ்வொரு நாட்டையும் அறைகளாக கருதி அதில் வசிக்கிறார்.
* மக்கள் நல்லவர்களாக இருக்கும் நாடும் நல்லதாகவே இருக்கும்.
* உணவில் அளவிற்கதிகமாக இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு ஆகிய சுவைகளைச் சேர்க்காதீர்கள். உணவை அதிக சூடாகவும் உண்ணாதீர்கள்.
* அறிவின் உச்சக்கட்டம் அன்பு. கல்வியின் உச்சக்கட்டம் நல்ல பழக்க வழக்கங்கள்.
* மாணவர்களுக்கு நல்ல வழக்கங்களைக் கற்றுத்தருவதும், தகுதியானவராக மாற்றித் தருவதுமே கல்வி கற்பித்தலின் அடிப்படை நோக்கமாகும்.
* மனிதர்களுக்கு பதினாறில் இருந்து முப்பது வயது வரையில் உள்ள காலகட்டம் மிகவும் முக்கியமானது. இந்த வயதில் கடுமையாக உழைத்துப்போராடி, லட்சியத்தை அடைய வேண்டும்.
* மனிதர்கள் பக்தியின் ஒரு அங்கமாகத்தான் இருக்க வேண்டும்.
* எந்த செயலையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுத்துங்கள்.
* உங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து, பொழுதுபோக்குகளில் காலத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. அந்த செல்வத்தால் பிறருக்கு சேவை செய்யுங்கள்.
* அதிகம் சாப்பிடுவது மந்த புத்தியையே தரும். ஆகவே உணவில் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
* கடவுள் ஒருவரே. அவரே இந்த வாழ்க்கையைக் கொடுத்தவர். அவரே வாழ்க்கையின் பாதுகாவலராகவும், லட்சியமாகவும் இருக்கிறார்.
* உங்களது பக்திப்பூர்வமான செயல்பாடுகள் பழத்தின் தோலுரித்து, உள்ளிருப்பதை எடுத்து சாப்பிடுவதைப்போல, பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
* 'நான் பயமில்லாதவன்', 'நானே கடவுள்' என்று சொல்லிக்கொண்டே இருங்கள். நிச்சயம் நீங்கள் யாராலும் வெல்ல முடியாதவராக வலிமை பெறுவீர்கள்.
* நிகழ்காலத்தில் நடப்பவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தொடர்புடன் நடந்து கொண்டிருக்கிறது.
* குழந்தைகள் தவறு செய்யும்போது மிகவும் கண்டிப்பு காட்டுங்கள். அவர்களே நற்செயல் செய்யும்போது, வாய்விட்டு புகழ்ந்து பேசுங்கள். அதுவே அவர்கள் எதிர்காலத்தில் நல்ல பாதையில் செல்லும் வழிகாட்டியாக அமையும்.
* லட்சியத்தை அடையும் வரையில் துவண்டு போவதும், அதிலிருந்து பின் வாங்குதலும் கூடாது.
* விண்வெளிக்குச் சென்று, நிலவிலும் கால் வைத்து விட்டவர்களுக்கு, பக்கத்து வீட்டினருடன் இணக்கமாக இருக்கத் தெரிவதில்லை.
* கடவுளை அடைவதையே, உங்களது லட்சியமாகக் கொண்டு வாழுங்கள்.
* கடவுளை வெறுமனே விளக்கேற்றி வழிபடுவதைவிட, இருதயத்தில் விளக்கேற்றி வழிபடுவதுதான் சிறந்தது.
* உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வரைமுறை வைத்துக்கொள்வது, தவறான செயல். இவ்வாறு செய்வது கடவுளை அவமரியாதை செய்வதற்குச் சமம்.
* சாப்பிடும் உணவு, அதற்கான வகைகளை வாங்கியவர், சமைத்தவர் மற்றும் பரிமாறியவர் ஆகியோரின் மனநிலையைப் பொறுத்தே இருக்கும்.
* பிறரது பார்வைக்கும், உங்களது பார்வைக்கும் வித்தியாசம் இருக்கட்டும். அதை உங்களுக்கான தனிப்பட்ட அடையாளமாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.
* பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், உணவிற்காக தரையிறங்கத்தான் வேண்டும்.
* விழிப்புணர்வை மனதில் உறுதியாக பிடித்துக் கொண்டவர்களுக்கு நிலையான பாதுகாப்பு நிச்சயம் இருக்கும்.
* உணர்வுகளைக் கட்டுப்படுத்தி செயல்பட்டால் மட்டுமே, மனிதன் மேன்மையான நிலையைப் பெற முடியும்.
* மனிதர்களுக்கு இறப்பு எந்த நேரத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த நேரத்தை, நிச்சயமாக கடவுள் முன்னறிவிப்பு செய்வதில்லை.
சாய்பாபா அறிவுரை

