sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே...!

/

நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே...!

நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே...!

நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே...!


ADDED : மே 11, 2017 01:58 PM

Google News

ADDED : மே 11, 2017 01:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒளிவு மறைவு இன்றி செய்ததை செய்ததாகச் சொல்லுங்கள். செய்யாததை செய்யவில்லை என மறுத்து விடுங்கள். நேர்மையாக வாழ்ந்தால் தோல்வியே வருவதில்லை.

* சாத்வீகமாக வாழ்பவனே எல்லா உயிர்களையும் நேசித்து மகிழ்வான். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வருவான்.

* செய்த குற்றத்தை மன்னிக்கும் மனம் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும். இந்த குணத்தால் மனத்தூய்மை ஏற்படும்.

* பிறர் பொருளைக் கண்டு ஆசைப்படுபவன், வாழ்வில் திருப்தி அடைய மாட்டான். நாளடைவில் அவன் இந்த இழிகுணத்தின் பிடியில் சிக்கி எல்லாவற்றையும் இழப்பான்.

* யாரையும் ஏமாற்றக்கூடாது. ஏமாறவோ ஏமாற்றவோ இடம் கொடுத்தால் இருதரப்புக்கும் கஷ்டமே.

* வேடிக்கையாகவோ, கோபமாகவோ, பண ஆசையிலோ, பிறருக்கு பயந்தோ மனிதன் பொய் பேசக் கூடாது. எந்த சூழலிலும் பொய் பேசாதவனே மக்களில் உயர்ந்தவன்.

* உண்மையே உள்ளத்தூய்மையை உண்டாக்கும். மனச்சுத்தமே ஒழுக்கத்தின் உயிர்நாடி. அதனால் பொய்யை விலக்கி விட்டு, உண்மையின் பாதையில் செல்லுங்கள்.

* பட்டினி, நோய், கவலையால் வாடுபவர்களுக்கு தேவையான உணவும், மருந்தும் கொடுத்து உதவுங்கள். அவர்களின் மனம் மகிழும் விதத்தில் ஆறுதல் வார்த்தைகளைக் கூறுங்கள்.

* பேராசை படைத்தவனுக்கு இந்த உலகம் முழுவதையும் பரிசளித்தால் கூட திருப்தி உண்டாவதில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருப்பவன் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

* கூட்டு முயற்சியால் கிடைத்த பொருளை கூட்டாளிக்கு பகிர்ந்து அளியுங்கள். சுயநலம் சிறிதுமின்றி பொதுநலத்துடன் அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.

* தேவைக்கு மேல் கிடைத்த பணத்தை சேமிப்பதை விட, தேவை உள்ளவனுக்கு கொடுப்பது சிறந்தது. பணம் சேரச் சேர மனிதனிடம் ஒழுக்கம், நேர்மை எண்ணம் குறைய ஆரம்பிக்கிறது.

* அறம் சிறந்த மங்கலப்பொருள். கொல்லாமை, ஒழுக்கம் ஆகிய இரண்டும் அறத்தின் அடிப்படை இலக்கணங்கள்.

* வாழ்க்கையை விருப்பம் போல நீட்டிக்க முடியாது. இந்த குறுகிய காலத்தில் உங்களின் முன்னேற்றத்திற்கும், பிறர்நலனுக்கும் பயன்படுத்த முயலுங்கள்.

* நல்ல நம்பிக்கையின்றி நல்லறிவு உண்டாகாது. நல்லறிவு இல்லாமல் நல்ல ஒழுக்கம் உண்டாகாது. எப்போதும் நல்ல நம்பிக்கை கொண்டவனாக இருங்கள்.

* வேரில் இருந்து அடிமரமும், அதில் இருந்து கிளைகளும் உண்டாவது போல அடக்கத்தில் இருந்து தர்மமும் அதிலிருந்து நற்செயல்களும் உண்டாகின்றன.

* போதும் என்ற மனம் கொண்டவன் மனநிறைவுடன் வாழ்வதோடு, மற்றவர்களையும் நிம்மதியுடன் வாழச் செய்வான்.

- மனம் திறக்கிறார் மகாவீரர்






      Dinamalar
      Follow us