sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தை அமாவாசைக்கு மறுநாள் ஒரே ஊரில் 11 கருட சேவை

/

தை அமாவாசைக்கு மறுநாள் ஒரே ஊரில் 11 கருட சேவை

தை அமாவாசைக்கு மறுநாள் ஒரே ஊரில் 11 கருட சேவை

தை அமாவாசைக்கு மறுநாள் ஒரே ஊரில் 11 கருட சேவை


ADDED : ஜன 20, 2017 03:44 PM

Google News

ADDED : ஜன 20, 2017 03:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

108 திவ்யதேசங்களில், சீர்காழியில் இருந்து 10 கி.மீ., தூரத்திலுள்ள திருநாங்கூரில் திருக்காவளம்பாடி, அரிமேய விண்ணகரம், திருவண்புருடோத்தமம், செம்பொன் செய்கோவில், மணிமாடக்கோவில், வைகுந்த விண்ணகரம் என்னும் ஆறு திவ்ய தேசங்கள் உள்ளன., இவ்வூரைச் சுற்றி திருத்தேவனார்த் தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், வெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகிய ஐந்து திவ்யதேசங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள திருவாலி திருநகரி (ஆலிநாடு) என்ற ஊரில் இருந்துதான் திருமங்கையாழ்வார் ஆட்சி புரிந்தார். தை அமாவாசையன்று அவர் இங்குள்ள அழகியசிங்கர் கோவிலில் இருந்து புறப்பட்டு, 11 திவ்யதேசங்களுக்கும் செல்வார். அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் பெருமாள் கோவிலில், இந்த 11 பெருமாள் கோவில் உற்சவர்களும் கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள். இம்மூர்த்திகளை திருமங்கையாழ்வார் தனித்தனியாக வலம் வந்து, மாலை மரியாதை செய்து, மங்களாசாசனம் செய்யும் காட்சியைக் காணலாம். ஒரு சேர பதினொரு உற்சவர்கள் வீதியுலா வருவதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.






      Dinamalar
      Follow us