sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

குட்டிப்பையனின் பெரிய சாகசம்

/

குட்டிப்பையனின் பெரிய சாகசம்

குட்டிப்பையனின் பெரிய சாகசம்

குட்டிப்பையனின் பெரிய சாகசம்


ADDED : செப் 01, 2016 09:58 AM

Google News

ADDED : செப் 01, 2016 09:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சீதக்களபச் செந்தாமரைப்பூம்பாதம்' என்று துவங்கும் விநாயகர் அகவலை அவ்வையார் இயற்றியுள்ளார். இதில் 'அற்புதம் நின்ற கற்பகக் களிறு' என்றும், 'வித்தக விநாயக' என்றம் வரிகள் வரும். இது விநாயகர் உயர்ந்த கல்விமான் என்பதைக் குறிக்கும். அவர் பல வித்தைகளிலும் அசகாய சூரர். ஆனாலும், இதற்காக கர்வம் கொள்ளாமல் குழந்தை உள்ளத்துடன் இருக்கிறார் என்பதை 'சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதம்' என்னும் முதல்வரி விளக்குகிறது.

'களபம்' என்றால் 'குட்டி யானை'. பார்ப்பதற்கு குட்டி யானையாக இருக்கும் விநாயகர், தன்னை சரணடையும் பக்தர்களுக்கு பெரிய செயல்களையும் எளிதாக சாதிக்கும் வல்லமையை அளிப்பவராக இருக்கிறார். இதற்கு வேறொரு விளக்கமும் இருக்கிறது. 'களபம்' என்றால் 'சந்தனக்கலவை' என்றும் பொருள் உண்டு. குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் போன்ற வாசனை திரவியம் கலந்த சந்தன கலவையை சிவந்த தாமரை பாதங்களில் பூசியிருப்பவர் என்றும் பொருள் சொல்வர்.






      Dinamalar
      Follow us