
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமனுக்கு அடியவர் என்பதால் அனுமனுக்கு 'ராமதாசர்' என்று பெயர். அவர் மீது துளசிதாசர் பாடியது அனுமன் சாலீஸா நாற்பது பாடல் கொண்டது. இதைப் பாடினால் கோழையும் தைரியசாலியாக மாறி விடுவான் என்பர். இந்தியில் இருந்தாலும் மொழி வேற்றுமையின்றி நாடு முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களால் பக்தியுடன் படிக்கப்படுகிறது. அந்நியப் படையெடுப்பின் போது மக்கள் மத்தியில் பக்தி, தேசப்பற்றை நிலைநிறுத்திய பெருமை
இதற்குண்டு. மூலநட்சத்திரத்தில் பிறந்த துளசிதாசரை ஆஞ்சநேயரின் அம்சம் என்பர்.

