sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கந்தசஷ்டி விழா காரணம்

/

கந்தசஷ்டி விழா காரணம்

கந்தசஷ்டி விழா காரணம்

கந்தசஷ்டி விழா காரணம்


ADDED : நவ 04, 2016 11:52 AM

Google News

ADDED : நவ 04, 2016 11:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டி விழா நடக்கிறது. முருகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததாக ஒரு வரலாறு இருந்தாலும், வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக ஐப்பசி மாத அமாவாசையன்று ஒரு யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். முருகன் அவதார நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அதற்காக முருகனின் அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் இருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, விரதம் இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். அவர் அருள் செய்த நாளே கந்தசஷ்டி என்கின்றனர்.






      Dinamalar
      Follow us