sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

காகிதத்தையும் கடவுளாக்கலாம்

/

காகிதத்தையும் கடவுளாக்கலாம்

காகிதத்தையும் கடவுளாக்கலாம்

காகிதத்தையும் கடவுளாக்கலாம்


ADDED : ஜூன் 02, 2009 04:50 PM

Google News

ADDED : ஜூன் 02, 2009 04:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* தூய்மையற்ற சிந்தனைகளை படித்தால், அசுத்தமான எண்ணங்கள் மனக்கண்ணாடியில் வழியே இதயத்திரையில் படிந்து விடும். ஆகையால் நல்லதிசையில் மனதைத் திருப்ப நல்லதைச் செய்ய வேண்டும்.<BR>* ஒரு படத்தைக் கடவுளாக வணங்கலாம். கடவுளைப் படமாகக் கருதக்கூடாது. ஒரு கல்லை, மண்ணை, காகிதத்துண்டைக் கடவுள் நிலைக்கு உயர்த்தலாம். ஆனால், கடவுளைக் கல்லாகவும், காகிதத்துண்டாகவும் கீழ் நிலைக்கு இறக்கி விடக்கூடாது.<BR>* மனித இதயத்தில் பெருந்தீக்கள் எரிகின்றன. கோபத்தீ, காமத்தீ, பாசத்தீ, ஆசைத்தீ இப்படி பலவிதமான நெருப்புகள் கனன்று கொண்டிருக்கின்றன. அவற்றை வளர விடக்கூடாது. வளரவிட்டால் நம்மை அவை அழித்து விடும். <BR>* கடந்து போன வசந்தம், இளமை இவையெல்லாம் போனால் போனது தான். வாழ்க்கை ஒரே திசையில் மட்டும் செல்லும்நீரோட்டம் என்பதால், அதைப் பயனுள்ள வகையில் செலவழிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். <BR>* தொண்டாற்றினால் உங்கள் திறமையை, தொண்டுசெய்ததை பிறர் அறிய வேண்டும் என்பதற்காக தற்பெருமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அடக்கமாக இருங்கள். பிறருக்கு தொண்டாற்ற வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள். </P>



Trending





      Dinamalar
      Follow us