ADDED : அக் 11, 2010 07:10 PM

* ஈசனின் ஒரு பாகத்தில் இருக்கும் 
உமையவளே! தாயே! வாழ்க்கையில் 
அல்லல் பட இருந்த போது, பாத கமலங்களை என் தலைமேல் வலிய வைத்து 
ஆட்கொண்டமைக்காக என் நன்றி. 
* நாய் போல கடையவனான என்னையும் ஒரு பொருளாக மதித்து அருள்செய்தவளே! அபிராமித்தாயே! உன் அடியவனாக வலிய ஏற்று கொண்டாய். உன்னை அறியும் அறிவையும் தந்தாய். தாயே! மலைமகளே! சிவந்த கண்களைக் கொண்ட 
திருமாலின் சகோதரியே! உன்னைப் போற்றுகிறேன்.
* என்றும் நிலைத்த அழகு கொண்டவளே! செந்தூரம் போன்ற சிவந்த நிறம் கொண்டவளே! காளியே! உன் மலர்போன்ற திருப்பாதங்களையே எப்போதும் என் மனம் சிந்தித்துக் கொண்டிருக்கட்டும்.
* அன்னையே! மனிதர்களும், தேவர்களும், தவம் 
செய்யும் ஞானிகளும் உன் திருவடிகளையே 
சரணடைந்து வணங்குகின்றனர். புனிதனான 
சிவபெருமானும் நீயும் எந்நாளும் என் நெஞ்சில் 
குடிகொண்டிருக்கவேண்டும். 
அபிராமி பட்டர்

