பொள்ளாச்சி படப்பிடிப்பை நிறைவு செய்த சிரஞ்சீவி 158 படக்குழு
ADDED : 2 days ago
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் 'வால்டர் வீரய்யா' திரைப்படம் வெளியானது. இதை பாபி கொல்லி இயக்கியிருந்தார். தற்போது இவர்களது கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.. ஆக்ஷன் படமாக அதே சமயம் குடும்பக்கதை அம்சத்துடன் உருவாகி வரும் இந்த படத்தில் மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன், சிரஞ்சீவியின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
மேலும் பிரியாமணி, நிவேதா பெத்துராஜ், ரக்ஷிதா ராம் உள்ளிட்ட கதாநாயகிகளும் நடிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு பொள்ளாச்சி தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் சில புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.