உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 17, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
அதிகரிக்கும் புலம் பெயர்வு
வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், போர் ஆகியவற்றால் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இடம் பெயர்கின்றனர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. இதன்படி 2020ல் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 3.5 கோடி பேர் என உயர்ந்துள்ளது. இது 2000ல் ஆண்டுக்கு 1.3 கோடி பேர் என இருந்தது. உலகில் 2008ல் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடி, 2019ல் கொரோனா பரவல் ஆகியவற்றின் போது மட்டும் புலம்பெயர்வு குறைவாக இருந்தது.
