உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 27, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: மேட்டுநீரேத்தான் முத்தாலம்மன் கோவில் தெருவில் 4 ஆண்டுகளுக்கு முன் பழுதான மின்கம்பம் அருகே புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் பழைய மின் கம்பம் அகற்றப்படவில்லை.
சில நாட்களுக்கு முன் மின்கம்பம் முறிந்து வீட்டின் முனபு் விழுந்தது. இதனால் வீட்டில் வசித்த பார்வையற்ற வயதான இருவர், கழிப்பறைக்கு பாதை, மின்சாரம் இன்றி 2 நாட்களாக சிரமப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரியத்தினர் உடனே மின்கம்பத்தை அகற்றினர். மின்வாரியத்தினர், தினமலர் நாளிதழுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.
