/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'வாட்ஸாப்பில் பிளாக்' செய்தவரை கடத்தி சென்ற பெண் கைது
/
'வாட்ஸாப்பில் பிளாக்' செய்தவரை கடத்தி சென்ற பெண் கைது
'வாட்ஸாப்பில் பிளாக்' செய்தவரை கடத்தி சென்ற பெண் கைது
'வாட்ஸாப்பில் பிளாக்' செய்தவரை கடத்தி சென்ற பெண் கைது
ADDED : பிப் 25, 2024 01:32 AM

ஹைதராபாத் : தன்னை வாட்ஸாப்பில் பிளாக் செய்தவரை, ஆள் வைத்து கடத்திச் சென்ற பெண் தொழிலதிபதிரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்தவர் திரிஷ்னா, 31. இவர், சொந்தமாக விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆன்லைன் திருமண வரன் பார்க்கும் தளத்தில் தன் பெயரை பதிவு செய்திருந்தார். அதில், பிரபல டிவி சேனலில் வீடியோ தொகுப்பாளராக பணியாற்றும் பிரணவ் சிஸ்ட்லா, 27, என்பவரின் சுயவிபரத்தை பார்த்து, அவரை தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
பின் தான், அந்த நபர் பிரணவ் சிஸ்ட்லா இல்லை என்பதும், அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, சைதன்யா ரெட்டி என்பவர் ஆள்மாறாட்டம் செய்திருப்பதும் திரிஷ்னாவுக்கு தெரியவந்தது.
இது குறித்த தகவலை, பிரணவ் சிஸ்ட்லாவை தொடர்பு கொண்டு திரிஷ்னா தெரிவித்து உள்ளார். அவர் உடனடியாக போலீசில் புகார் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பிரணவிற்கு தொடர்ந்து வாட்ஸாப் வாயிலாக தகவல் அனுப்பி வந்தார், திரிஷ்னா.
தொந்தரவாக கருதி, திரிஷ்னாவை வாட்ஸாப்பில் பிளாக் செய்து, தொடர்பை துண்டித்தார், பிரணவ். இதனால் ஆத்திரமடைந்த திரிஷ்னா, தன் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு 50,000 ரூபாய் தந்து பிரணவை கடத்தி வரும்படி கூறினார். அதன்படி அவர் கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு, சமீபத்தில் பிரணவை கடத்தி வந்து திரிஷ்னாவிடம் ஒப்படைத்தார். அவரிடம் இனி தொடர்ந்து பேசுவதாக பிரணவ் ஒப்புக்கொண்டார். அதன் பின்னரே அவரை அனுப்பி வைத்தார்.
உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பிரணவ், நடத்த விபரங்களை கூறி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் திரிஷ்னா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.