sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'கண்டுபிடிச்சதே காங்., தானே!'

/

'கண்டுபிடிச்சதே காங்., தானே!'

'கண்டுபிடிச்சதே காங்., தானே!'

'கண்டுபிடிச்சதே காங்., தானே!'

1


PUBLISHED ON : மே 24, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 24, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி, திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'மாநில அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு தான் கவர்னர் செயல்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாவுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் கவர்னர், ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும். வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி விளக்கம் கேட்கலாம். அதற்கு விளக்கம் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு.

'ஜனாதிபதி மூலம் விளக்கம் கேட்கும் யுக்தியை பா.ஜ., அரசு கையாண்டுள்ளது. கவர்னர் மூலம் மாநில அரசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது...' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'கவர்னர் மூலம், மாநில அரசு களை கட்டுப்படுத்தும் கலையை கண்டுபிடிச்சதே காங்கிரஸ் தானே... அதை பா.ஜ.,வினர், 'பாலோ' பண்றாங்க...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.






      Dinamalar
      Follow us