PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூவத்துார்:கூவத்துார் அடுத்த சீக்கனாங்குப்பம் கிராமத்தில், ராமகிருஷ்ண ரெட்டி என்பவருக்குச் சொந்தமான மார்க் சொர்ணபூமி எனப்படும் தனியார் தொழில்பூங்கா உள்ளது.
இதில் தனியார் நிறுவனங்கள், கல்லுாரிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
இங்கு நேற்று காலை 7:00 மணிக்கு சோதனைக்கு வந்த அமலாக்கத் துறையினர், சோதனை செய்துவிட்டு 7:30 மணிக்கு திரும்பச் சென்றதாக கூறப்படுகிறது.
பின், காலை 10:00 மணிக்கு மீண்டும் வந்த, இரண்டு துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உட்பட 7 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர், இந்த அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.