PUBLISHED ON : ஏப் 13, 2026 11:27 PM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்
சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரின் 'ரவுலட்' சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1919 ஏப்., 13ல் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த திடலில் உள்ளே, வெளியே செல்ல ஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது. போராட்டத்தை கண்டு கொதிப்படைந்த ஆங்கிலேய அரசு, மனிதாபிமானமற்ற முறையில் 10 நிமிடம் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். ஆங்கிலேய அரசோ 379 பேர் பலியாகினர் என தெரிவித்தது.





