Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/எண்ணத்தால் இயங்கும் கணினி

எண்ணத்தால் இயங்கும் கணினி

எண்ணத்தால் இயங்கும் கணினி


PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெட்டா நிறுவனம், எண்ணங்களை உணர்ந்து செயல்படும் ஒரு புதிய வகை கருவியை பரிசோதித்து வருகிறது. கடிகாரம் போல மணிக்கட்டில் கட்டக்கூடிய இந்த அணி கருவி, 'சர்பேஸ் எலெக்ட்ரோமயோகிராபி' (SEMG) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது, தசைகளின் மிகச்சிறிய அசைவுகளிலிருந்து வெளிப்படும் நுண்மின் சமிக்ஞைகளை உணரும் திறன் கொண்டது. இதனால், ஒரு விரலை அசைக்க வேண்டும் என நீங்கள் நினைக்கும்போதே, இந்த அணி கருவி, உங்கள் எண்ணத்தைப் புரிந்துகொண்டு செயல்படும்.

இந்தத் தொழில்நுட்பம், சுட்டியை நகர்த்துதல், விசைப்பலகையை அழுத்துதல் போன்ற கணினி வேலைகளை எளிதாக்குகிறது. இது, கணினிக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, ஒரு புதுவகை இணைப்பை உருவாக்குகிறது. இதன் வாயிலாக, கணினியை இயக்கும்போது ஓர் இயந்திரத்தைப் பயன்படுத்துவது போலத் தோன்றாது. மாறாக, கணினி, நமது எண்ணங்களின் நீட்சியாகவே உணர்வோம்.

இந்தக் கண்டுபிடிப்புக்கு எதிர்காலத்தில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, உடல் இயக்கத்தில் சிரமம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் ஆற்றலைக் கொண்டது என்று சொல்லலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap