sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 15, 2026 ,தை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2023 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

/

2023 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

2023 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

2023 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2024

Google News

PUBLISHED ON : ஜன 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஏப்.1: நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை அரசு 50 சதவீதம் உயர்த்தியது.

ஏப்.6: வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவிட்ட பீஹாரின் மனீஷ் காஷ்யப் கைது.

ஏப்.10: 'ஆன்லைன் ரம்மி' தடை சட்ட மசோதாவுக்கு தமிழக கவர்னர் ரவி ஒப்புதல்.

*தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா 72, காலமானார்.

ஏப்.14: முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அமைச்சர்களின் சொத்து பட்டியலை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

ஏப்.16: உச்சநீதிமன்ற அனுமதிக்குப் பின் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

ஏப்.25: மணல் கடத்தல் புகார் அளித்த துாத்துக்குடி முறப்பநாடு வி.ஏ.ஓ., லுார்து பிரான்சிஸ் வெட்டிக்கொலை.

*குட்கா விற்பனைக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

இந்தியா

ஏப்.1: கொலை வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற பஞ்சாப் முன்னாள் காங்., தலைவர் சித்து விடுதலை.

ஏப்.3: கேரளாவில் ஆலப்புழா - கண்ணுார் ரயிலில் பெட்ரோல் ஊற்றி தீ. 3 பேர் பலி. ஷாரூக் சைபி கைது.

ஏப்.6: உலகில் 'பிசி'யான விமான நிலையங்களில் அமெரிக்காவின் அட்லான்டா முதலிடம். டில்லிக்கு 9வது இடம்.

ஏப்.7: பா.ஜ.,வில் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி இணைந்தார்.

ஏப்.9: 'புலி, சிங்கம், சிறுத்தை, சிவிங்கிப்புலி உள்ளிட்டவைகளை பாதுகாக்க 'சர்வதேச பெரிய பூனை கூட்டணி' திட்டம் துவக்கம்.

ஏப்.10: ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரம். மம்தாவின் திரிணாமுல் காங்., சரத்பவாரின் தேசியவாத காங்., இழந்தன.

ஏப்.12: பஞ்சாப் பதிண்டா முகாமில் சக ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தின் இருவர் உட்பட 4 பேர் பலி.

ஏப்.14: இந்தியாவின் முதல் '3டி' தபால் நிலையம் பெங்களூருவில் திறப்பு.

*வடகிழக்கு மாநிலத்தின் முதல் எய்ம்ஸ் கல்லுாரி அசாமில் துவக்கம்.

ஏப்.15: கோல்கட்டாவில் நீருக்கடியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை சோதனை.

*மஹாராஷ்டிராவின் ராய்காட் மலையில் பஸ் கவிழ்ந்தது. 28 பேர் பலி.

*ஆயுதப் படை பணிக்கான போட்டித்தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என மத்திய

அரசு அறிவிப்பு.

*உபி.,யில் முன்னாள் எம்.பி., அட்டிக் அஹமது, அவரது சகோதரர் அஷ்ரப் சுட்டுக் கொலை.

ஏப்.17: பா.ஜ.,வில் இருந்து விலகிய கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரசில் இணைந்தார்.

ஏப்.19: நாகாலாந்தில் முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லுாரி துவக்கம்.

ஏப்.20: கேரளாவில் ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு விளையாட்டு மைதான திட்டம் துவக்கம்.

ஏப்.23: பஞ்சாபில் காலிஸ் தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது.

ஏப்.25: தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியனில் முதல் மருத்துவக்கல்லுாரி திறப்பு.

உலகம்

ஏப்.2: திரவ ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் எம்.எப். ஹைட்ரா படகு நார்வேயில் அறிமுகம். 300 பேர் பயணிக்கலாம்.

ஏப்.3: 'நேட்டோ' ராணுவ கூட்டமைப்பில் 31வது நாடாக இணைந்தது பின்லாந்து.

ஏப்.12: மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடிய மக்கள் மீது வான் வழி தாக்குதல். 113 பேர் பலி.

ஏப்.15: ஜெர்மனியில் 1960ல் இருந்து பயன்படுத்திய அணு உலை மின்சாரம் முடிவுக்கு வந்தது.

ஏப்.17: உலகில் போதைப் பொருள் விற்பனையில் அதிக அன்னிய செலாவணி (ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கோடி) ஈட்டும் நாடானது சிரியா.

ஏப்.19: ஐ.நா., புள்ளி விபரப்படி உலக மக்கள் தொகையில் சீனாவை (142.57 கோடி) முந்தி இந்தியா (142.86 கோடி) முதலிடம்.

ஏப்.24: வங்கதேச அதிபராக சஹாபுதீன் பதவியேற்பு.

*உள்நாட்டு போர் பாதித்த சிரியாவில் இருந்து 'ஆப்பரேஷன் காவிரி' திட்டத்தில் 3800 இந்தியர்கள் மீட்பு.

ஏப்.29: உலகில் அகதிகள் எண்ணிக்கை 18.40 கோடி என உலக வங்கி அறிவிப்பு.

உயரே...உயரே

ஏப்.8: 'சுகோய் - 30' போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.

முத்தான மூன்று

ஏப்.8: தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம், சென்னை - கோவைக்கு 'வந்தே பாரத்' ரயில், மதுரை தல்லாகுளம் - செட்டிகுளம்(7.2 கி.மீ.,) மேம்பாலத்தை துவக்கினார்.

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்

ஏப்.26: குஜராத்தின் சோம்நாத்தில் 10 நாள் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடந்தது. நிறைவு விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை.

இந்திய அழகி

ஏப். 15: ராஜஸ்தானின் நந்தினி குப்தாவுக்கு 'மிஸ் இந்தியா' பட்டம்.

புதுமை பயணம்

ஏப்.23: கேரளாவின் கொச்சியில் 'வாட்டர் மெட்ரோ' படகு சேவை துவக்கம்.

டாப் 5

ஏப்.30: பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' 100வது உரை ஒலிபரப்பானது.

ஏப்.26: பிலிப்பைன்சின் 'ராமன் மகசேசே' விருதை திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா பெற்றார்.

ஏப்.9: இந்தியாவில் புலி எண்ணிக்கை 3167 ஆக உயர்வு.

ஏப்.25: 'ஆப்பரேஷன் காவேரி' திட்டத்தின் கீழ் சூடானில் இருந்து (ஏப்.25 - மே 5) 3862 இந்தியர்கள் மீட்பு.

ஏப்.26: சத்தீஸ்கரின் தந்தேவாடாவில் நக்சலைட் வெடிகுண்டு தாக்குதல். 11 போலீசார் வீரமரணம்.






      Dinamalar
      Follow us