sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 14, 2026 ,மார்கழி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2023 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்

/

2023 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்

2023 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்

2023 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2024

Google News

PUBLISHED ON : ஜன 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

செப்.24: தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் திருநெல்வேலி - சென்னைக்கு இயக்கம்.

அக்.2: தமிழகத்தின் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீர முத்துவேல் உட்பட 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா

ரூ. 25 லட்சம் பரிசு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

அக்.9: திருச்செந்துார் உடன்குடி கருப்பட்டிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு.

அக்.10: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கம்.

அக்.15: சென்னை அண்ணா பல்கலையில் அப்துல் கலாம் சிலை திறப்பு.

அக்.17: சிவகாசி ரெங்க பாளையத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்து. 13 பேர் பலி.

அக்.22: கணைய புற்று நோயை முன்கூட்டியே கண்டறிய சிறப்பு ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐ.ஐ.டி., நிறுவியது.

அக்.23: பா.ஜ., வில் இருந்து நடிகை கவுதமி விலகல்.

அக்.26: சென்னை கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் கைது.

இந்தியா

செப்.1: எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணிக்கு 14 ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்.

செப்.2: ஒரே நாடு; ஒரே தேர்தல் ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு.

செப்.17: கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வசித்த கோல்கட்டா சாந்தி நிகேதன் ஆசிரமம்

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் இடம் பெற்றது.

செப்.19: பழைய பார்லி மென்ட்டுக்கு 'அரசியலமைப்பு மாளிகை' என பெயர் வைக்கப்பட்டது.

செப்.21: லோக்சபா, சட்ட

சபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா பார்லி மென்டில் நிறைவேற்றம்.

*ம.பி.,யின் ஓம் காரேஸ்வரரில் நர்மதை நதிக்கரையில் 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறப்பு.

செப்.22: தே.ஜ., கூட்டணியில் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்தது.

செப்.29: தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடகாவில் 'பந்த்'.

அக்.3: ஜார்க்கண்டில் லித்தியம் தனிமம் கண்டுபிடிப்பு.

அக்.12: அகலப்படுத்தப்பட்ட மூணாறு - போடி மெட்டு தேசிய நெடுஞ்சாலை திறப்பு.

அக்.13: உலகின் உயரமான சியாச்சின் (15,500 அடி) பனிமலையில் அலைபேசி டவரை நிறுவியது

இந்திய ராணுவம்.

அக்.14: நாகாலாந்தில் முதல் மருத்துவக்கல்லுாரி திறப்பு.

அக்.15: நவராத்திரிக்காக பிரதமர் மோடி எழுதிய 'கர்பா' பாடலின் 'வீடியோ ஆல்பம்' வெளியீடு.

அக்.17: ஒரே பாலின திருமணத்துக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு.

அக்.20: முதல் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து டில்லி-காசியாபாத் இடையே (180 கி.மீ.,) துவக்கம்.

அக்.21: ஒடிசா கவர்னராக முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் பதவியேற்பு.

அக்.23: தெருநாய் துரத்தியதில் தலையில் காயம் அடைந்த 'வாக் பக்ரி' தேயிலை குழும இயக்குனர் பராக் தேசாய் உயிரிழப்பு.

அக்.28: இந்தியாவின் முதல் திரவ நானோ டி.ஏ.பி., (டி- அம்மோனியம் பாஸ்பேட்) உரம் குஜராத்தின் காந்திநகரில் அறிமுகம்.

அக்.29: ஆந்திராவின் விஜய நகரத்தில் சிக்னலுக்கு நின்றிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. 14 பேர் பலி.

உலகம்

செப்.9: மொராக்கோவில் நிலநடுக்கம். 2100 பேர் பலி.

அக்.7: ஆப்கனின் ஹெராத்தில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். 2000 பேர் பலி.

அக்.8: 'ஆப்பரேஷன் அஜய்' திட்டத்தின்படி இஸ்ரேல் போரில் சிக்கிய இந்தியர்கள் மீட்பு.

அக்.14: வெளிநாடுகளில் உயரமான அம்பேத்கர் சிலை (19 அடி) அமெரிக்காவில் திறப்பு.

அக்.16: இந்தியாவுக்கான ஐ.நா., நிரந்தர பிரதிநிதியாக அரிந்தம் பாக்சி பதவியேற்பு.

அக்.19: இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுடன் சந்திப்பு.

அக்.22: இங்கிலாந்தின் 'பெல்லா' பூனை அதிக சத்தத்துடன் (54.6 டெசிபல்) உறுமி கின்னஸ் சாதனை.

அக்.23: இந்திய பயணி களுக்கு 'விசா' தேவையில்லை என இலங்கை அறிவிப்பு.

அக்.28: இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஐ.நா., தீர்மானத்துக்கு 120 நாடு ஆதரவு. 14 நாடு எதிர்ப்பு. இந்தியா வெளிநடப்பு.

இந்தியா தலைமை

செப். 9: டில்லி பிரகதி மைதானத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடந்தது. உள்படம்: நுழைவுவாயிலில் 28 அடி உயரம், 21 அடி அகலம், 25 டன் எடையுடன் உலகின் பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டது.

ஆயிரம் அருமை

செப். 15: பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் துவக்கம்.

சிங்கப்பூர் 'ரத்னம்'

செப். 14: சிங்கப்பூர் அதிபராக இலங்கை தமிழர் வம்சாவளி தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு.

கண்ணாடி பாலம்

செப். 6: கேரளாவின் வாகமண்ணில் கடல் மட்டத்திலிருந்து 3600 அடி உயரத்தில் நீளமான கண்ணாடி நடைபாலம் (120 அடி) திறப்பு.

பசுமை பாதை

அக். 2: சோலார் கூரையுடன் 21 கி.மீ., துார 'இந்தியாவின் முதல் சைக்கிள் பாதை' ஐதராபாத்தில் திறப்பு.

டாப் 5

அக்.7: இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் துவக்கம்.

செப். 10: திறன் மேம்பாட்டு வாரியத்தில் ரூ.371 கோடி ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை.

செப். 18: ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய டில்லி பார்லிமென்ட்டுக்கு எம்.பி.,க்கள் விடை கொடுத்தனர். புதிய கட்டடத்துக்கு இடம் மாறினர்.

செப். 25: பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறியது.

அக். 2: இந்தியாவில் முதன்முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு விபரம் பீஹாரில் வெளியீடு.






      Dinamalar
      Follow us