Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: மறந்துவிடாதே!

கவிதைச்சோலை: மறந்துவிடாதே!

கவிதைச்சோலை: மறந்துவிடாதே!


PUBLISHED ON : மார் 02, 2025

Follow on Google

PUBLISHED ON : மார் 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணே!

சாத்தான்கள் ஓதிடும்

வேதங்களிலிருந்து விலகி வா...

ஆறாவது அறிவை

பயன்படுத்தத் தவறிடாதே!

கானல் நீரை

உண்மையென நம்ப வைத்து

உன்னை திசை திருப்பி

குட்டையைக் குழப்பிவிட

காத்திருக்கும் சுயநலவாதிகளிடம்

சிக்கிக் கொள்ளாதே!

புதுமைப் பெண்

புரட்சிப் பெண் என்ற

போதையில் சிக்கி

கலாசாரம், பண்பாடு எனும்

மதிப்புமிகு பாதையிலிருந்து

விலகிப் போய் விடாதே!

புகழ்ச்சிக்கும்

போலியான வர்ணனைக்கும்

மதிமயங்கிப் போய்

கற்புக்குத் துாண்டிலிடும்

கயவர்களிடம் ஏமாந்து விடாதே!

உன்னை விட

இமயம் உயரமில்லை...

உன் உள்ளத்தின் உறுதியை விட

இரும்பு திடமில்லை...

தன்னம்பிக்கையை ஒருபோதும்

கைவிட்டு கலங்கி நிற்காதே!

உன் அழுகை

உனக்கு ஆயுதமென்று கூறும்

அபத்தமான கருத்தை

ஏற்றுக் கொண்டு ஏமாந்து

எதிர்த்திடும் திராணியற்று

மூலையில் முடங்கி விடாதே!

உதவிகளில் உள்நோக்கமும்

ஆறுதலில் கள்ளத்தனமும்

ஒளித்து வைத்து

உன்னை அணுகும் கயவர்களின்

அடையாளத்தைக் கண்டு

தப்பித்துக் கொள்...

அப்பாவியாய் நம்பி விடாதே!

போராட்டம் இல்லாத

வாழ்க்கை எவருக்குமில்லை...

எதிர்ப்புகள் இல்லாத

ஏற்றங்கள் சுவைப்பதில்லை!

தடைகளைத் தாண்டாமல்சாதனைகள் நிகழ்வதில்லை...

தோல்விகளைக் கடக்காமல்

வெற்றிகள் கிட்டுவதில்லை...

மங்கையே இதை மறந்து விடாதே!

— இந்திராணி ஆறுமுகம், கடலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap