Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: மனிதநேயம் மகத்தானது!

கவிதைச்சோலை: மனிதநேயம் மகத்தானது!

கவிதைச்சோலை: மனிதநேயம் மகத்தானது!


PUBLISHED ON : ஜூன் 29, 2025

Follow on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுந்தவனுக்கும்

விழுந்தடித்து

எழுந்தவனுக்கும் தான் தெரியும்

முன்னேறும் பாதை

கரடு முரடானது என்று!

உழைப்பவனுக்கும்

உழைத்து களைத்தவனுக்கும் தான்

தெரியும்

வியர்வைத் துளிகள்

மதிப்பு மிக்க

மாணிக்க கற்கள் என்று!

கொடுப்பவனுக்கும்

கொடுத்து கொடுத்து

கரம் சிவந்தவனுக்கும் தான்

தெரியும்

தர்மம் உலகத்தில்

உயர்ந்தது என்று!

சிந்திப்பவனுக்கும்

சிந்தனைக்கு செயல்வடிவம்

கொடுப்பவனுக்கும் தான் தெரியும்

சாதிக்கும் வழிமுறைகள்

சிக்கலானவை என்று!

வாழ்ந்தவனுக்கும்

வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கும் தான்

தெரியும்

வாழ்க்கை ஒரு

போராட்ட களம் என்று!

கசப்புகளை மறப்பவனுக்கும்

தவறுகளை

மன்னிப்பவனுக்கும் தான் தெரியும்

மானிட பிறவியில்

மனித நேயம்

மகத்தானது என்று!

- எல்.மூர்த்தி, கோவை.

தொடர்புக்கு: 77087 71321


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap