/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
செவந்தம்பட்டி ரக கத்திரிக்காய் சாகுபடி
/
செவந்தம்பட்டி ரக கத்திரிக்காய் சாகுபடி
PUBLISHED ON : ஏப் 30, 2025

செவந்தம்பட்டி ரககத்திரி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும்வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல விதபழங்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்யலாம். அந்தவரிசையில், செவந்தம்பட்டி ரக கத்தி ரிக்காய் சாகுபடி செய்துள்ளேன்.
இது, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், எளிதாக சாகுபடி செய்யலாம். அந்த அளவிற்கு மிகவும் குட்டையாகவும், நல்ல மகசூலும் கிடைக்கும் வகையில் இருக்கும்.
குறிப்பாக, சுண்டக்காய் வேரில் செவந்தம்பட்டி ரக கத்திரி செடியை ஒட்டு கட்டி சாகுபடி செய்யலாம். கத்திரி விதையில் இருந்து செடியாக சாகுபடி செய்யும் போது, ஆறு மாதங்கள் மட்டுமே, கத்திரி மகசூல் கிடைக்கும்.
இந்த சுண்டக்காய் வேரில், கத்திரி செடி ஒட்டுபோட்டு சாகுபடி செய்யும் போது, இரண்டு ஆண்டுகள் வரையில்கத்திரி மகசூல் பெறலாம்.
ஒருமுறை நடவு செய்தால், இரு ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்தால் போதும்; நல்ல மகசூல், வருவாய் ஈட்ட வழி வகுக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா
72005 14168