Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஆக 08, 2025 04:12 AM

Follow on Google

ADDED : ஆக 08, 2025 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செல்பி யு டியூபர் மீது வழக்கு

பெங்களூரின், ஜாலஹள்ளியில் வசிக்கும் யு - டியூபர் கவுதம் அர்ஸ், 32. நேற்று முன் தினம் ஷிவமொக்கா, சாகராவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்தார். ஜோக் நீர் வீழ்ச்சியின் ராஜா நீர் வீழ்ச்சியின் பாறை அருகில், அபாயமான இடத்தில் நின்று செல்பி வீடியோ எடுத்தார். அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதை கவனித்த சித்தாபுரா போலீசார், கவுதம் அர்ஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இளைஞர் தற்கொலை

தாவணகெரே, நேமதியின், மாச்சிகொண்டனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் யஷ்வந்த், 24. இவர் நிதி நிறுவனம் ஒன்றில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். சுனில் நாயக் என்பவரிடம் 40,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கடனை அடைக்க தாமதமானதால், வீட்டை ஜப்தி செய்வதாக மிரட்டினார். மனம் நொந்த யஷ்வந்த், நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டிரைவருக்கு செருப்படி

விஜயநகரா மாவட்டத்தின், மல்லநாயகனஹள்ளி அருகில், நேற்று மதியம் தலைமை ஏட்டு மஞ்சுநாத், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், பைக் மீது மோதியது. இதனால் கோபமடைந்த தலைமை ஏட்டு மஞ்சுநாத், பஸ் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பிடித்து இழுத்து செருப்பால் அடித்தார். மஞ்சுநாத் மீது, கூட்லகி போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.

தங்கச்செயின் பறிப்பு

மாண்டியா, நாகமங்களாவின், படுவலபட்டணா கிராமத்தில் வசிப்பவர் ஜெயம்மா, 60. இவர் நேற்று மதியம், கிராமத்தின் புறநகரில் சாலையில் நடந்து சென்றார். அப்போது, முகமுடி அணிந்து பைக்கில் வந்த மர்மநபர்கள், அவரது முகத்தில் பிளேடால் கிழித்து விட்டு, அவரது கழுத்தில் இருந்த 40 கிராம் எடையுள்ள தங்கச்செயினை பறித்து கொண்டு தப்பியோடினர். காயமடைந்த அவர், சிகிச்சை பெறுகிறார்.

யானை தாக்கி விவசாயி பலி

குடகு மாவட்டம், மடிகேரி செம்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவப்பா, 72. இவரை நேற்று முன்தினம் யானை தாக்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்தார். இவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், நேற்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

யூரியா உரம் மீட்பு

சிக்கமகளூரு, கொப்பாவின் பாளஹொ ன்னுார் கிராமத்தில் வீடு ஒன்றில், யூரியா உரம் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி, 300 மூட்டை யூரியாவை பறிமுதல் செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap