
பச்சை விளக்கு
சிவாஜிநகர், வசந்த்நகர், எம்.ஜி.ரோடு, ரிச்மென்ட் டவுன், மாநகராட்சி சதுக்கம், மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், ராஜாஜிநகர், பசவேஸ்வரா நகர், நந்தினி லே - அவுட், கத்ரிகுப்பே, விஜயநகர், இந்திராநகர், பனசங்கரி, ஹலசூரு, வித்யாரண்யபுரா, கோரமங்களா, மடிவாளா, மல்லேஸ்வரம், சதாசிவநகர், சேஷாத்ரிபுரம், பானஸ்வாடி, கம்மனஹள்ளி, லிங்கராஜபுரம், ராமமூர்த்திநகர், ஜாலஹள்ளி, ஆர்.டி.நகர், பொம்மனஹள்ளி, மஹாலட்சுமி லே - அவுட், நைஸ் ரோடு, நாகரபாவி, பி.டி.எம்., லே - அவுட், டி.தாசரஹள்ளி, பீன்யா, எலஹங்கா, கோகிலு, ஹெப்பால், ஹொரமாவு, கே.ஆர்.புரம், வர்த்துார், ஒயிட்பீல்டு, குஞ்சூர், ஆர்.ஆர்.நகர், ஞானபாரதி, தாவரகெரே உட்பட நகர் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.
ஒரு கி.மீ., உயரம்
பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பனசங்கரி கத்ரிகுப்பே பகுதியில், ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ஒரு ஆட்டோ, ஒரு கார் மீது விழுந்தது. இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் மகேஷ், 45 உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். காரும் பலத்த சேதம் அடைந்தது. ஆனால் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்றனர். ஆட்டோ மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றி, மகேஷ் உடல் மீட்கப்பட்டது.


