sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

43 பேர் மீதான வழக்கு வாபஸ் அரசு உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து

/

43 பேர் மீதான வழக்கு வாபஸ் அரசு உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து

43 பேர் மீதான வழக்கு வாபஸ் அரசு உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து

43 பேர் மீதான வழக்கு வாபஸ் அரசு உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து


ADDED : மே 30, 2025 06:27 AM

Google News

ADDED : மே 30, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:செல்வாக்கு மிக்க நபர்கள், ஹூப்பள்ளி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் உட்பட 43 பேர் மீதான குற்ற வழக்கை ரத்து செய்யும் அரசின் உத்தரவை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கர்நாடகாவில் 2008 முதல் 2023ம் ஆண்டு வரை செல்வாக்குமிக்க தலைவர்கள், ஹூப்பள்ளி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட 43 பேர் மீதான குற்ற வழக்குகளை, அரசு வாபஸ் பெறுவதாக உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து, வக்கீல் கிரிஷ் பரத்வாஜ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி அஞ்சாரியா, அரவிந்த் முன் நடந்து முடிந்தது. தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று நீதிமன்றம் கூடியதும், தலைமை நீதிபதி அஞ்சாரியா அளித்த தீர்ப்பு:

கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க நபர்கள், ஹூப்பள்ளி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட 43 பேர் மீதான குற்ற வழக்கு வாபஸ் பெறுவதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 15ல் அரசு வெளியிட்ட ஆணை, ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு செல்லுபடியாகாது.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக, நான் நியமிக்கப்பட்டு உள்ளேன். எனவே, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, இதுவே என் கடைசி வழக்கு, கடைசி தீர்ப்பு. எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து வக்கீல்கள், ஊழியர்களுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us