sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'அசம்பாவிதம் நடந்திருக்க கூடாது' அமைச்சர் மது பங்காரப்பா வருத்தம்

/

'அசம்பாவிதம் நடந்திருக்க கூடாது' அமைச்சர் மது பங்காரப்பா வருத்தம்

'அசம்பாவிதம் நடந்திருக்க கூடாது' அமைச்சர் மது பங்காரப்பா வருத்தம்

'அசம்பாவிதம் நடந்திருக்க கூடாது' அமைச்சர் மது பங்காரப்பா வருத்தம்


ADDED : ஜூன் 06, 2025 11:42 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: ''ஆர்.சி.பி., அணி நிகழ்ச்சியில் அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடாது; நடந்துவிட்டது. இனி, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல், அரசு எச்சரிக்கையாக இருக்கும். சட்டப்படி என்ன நடக்க வேண்டுமோ, அது நடக்கும்,'' என, மாநில தொடக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.

ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

அசம்பாவிதத்திலும், அரசியல் செய்வது பா.ஜ.,வினரின் பழக்கம். பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், பலர் பலியாகினர். இது மத்திய அரசின் தோல்வி இல்லையா; இதுதொடர்பாக, பிரதமர் மோடியிடம் ராஜினாமா கேட்கவில்லையே ஏன்?

பெங்களூரில் நடந்த கூட்ட நெரிசல் அசம்பாவிதத்தை, பஹல்காம் சம்பவத்துடன் ஒப்பிடக் கூடாது. ஆனால் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, எங்களிடம் கேள்வி எழுப்பும் பா.ஜ.,வினர், 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலை, ஏன் நிறுத்தினர் என்ற கேள்விக்கு இதுவரை பதில் அளித்தனரா?

கூட்ட நெரிசலுக்கு முன்பு, பா.ஜ.,வினர் என்ன கூறினர் என்பது, எங்களுக்கும் தெரியும். சம்பவம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா, ஏற்கனவே சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சட்டப்படி என்ன நடக்க வேண்டுமோ, அது நடக்கும். இச்சம்பவம் நடந்திருக்கக் கூடாது, நடந்துவிட்டது. இனி, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல், அரசு எச்சரிக்கையாக இருக்கும்.

பா.ஜ., - ம.ஜ.த.,வினர் வாயை திறந்தாலே, முதல்வர், துணை முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்றனர். அக்கட்சியினருக்கு மூளை இல்லை; பொது அறிவு இல்லை. இதனால் தான் ஆட்சியை இழந்து, எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us