sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பாண்டவர்கள் தங்கிய ஸ்ரீ பெட்டத பைரவேஸ்வரா கோவில்

/

பாண்டவர்கள் தங்கிய ஸ்ரீ பெட்டத பைரவேஸ்வரா கோவில்

பாண்டவர்கள் தங்கிய ஸ்ரீ பெட்டத பைரவேஸ்வரா கோவில்

பாண்டவர்கள் தங்கிய ஸ்ரீ பெட்டத பைரவேஸ்வரா கோவில்


ADDED : செப் 23, 2025 04:53 AM

Google News

ADDED : செப் 23, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புராவின் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெட்டத பைரவேஸ்வரா கோவில் அமைந்து உள்ளது.

புராணங்களின்படி, இங்கு வசித்து வந்த சிவபெருமானின் தீவிர பக்தரான மாண்டவ்ய முனிவர் முன், லிங்க ரூபத்தில் சிவபெருமான் தோன்றினார். அன்று முதல், அவர் சிவனை வழிபட்டு வந்து உள்ளார்.

பாண்டவர்கள் வனவாசத்தின் போது, இக்கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. அன்று முதல் இக்கோவில் பெட்டத பைரவேஸ்வரா என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதன்பின் வந்த ஆட்சியாளர்களால் பல பரிணாமங்கள் பெற்றது. 600 ஆண்டுகளுக்கு முந்தைய இக்கோவிலின் சிற்பங்கள், கோபுரங்கள், துாண் மண்டபங்கள் திராவிட கட்டட கலையில் கட்டப்பட்டுள்ளது.

சிவபெருமானை வழிபடுவோர், இக்கோவிலை உயிராக கருதுகின்றனர். மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நடப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலத்தவரையும் ஈர்க்கும் கோவிலாக அமைந்து உள்ளது.

கோவிலுக்கு இரு சக்கர வாகனம், கார்களில் செல்லலாம். மாலை 5:00 மணிக்குள் கோவிலுக்கு சென்று திரும்புவது அவசியம். அதன் பின், வனப்பகுதியில் விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இது தவிர, அடிவாரத்தில் இருந்து 500 படிக்கட்டுகள் வழியாகவும் மலையின் உச்சிக்கு சென்றடையலாம்.

- நமது நிருபர் --






      Dinamalar
      Follow us