sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நகை, பணத்துக்காக பெண் கொலை உறவினர் உட்பட இருவர் கைது

/

நகை, பணத்துக்காக பெண் கொலை உறவினர் உட்பட இருவர் கைது

நகை, பணத்துக்காக பெண் கொலை உறவினர் உட்பட இருவர் கைது

நகை, பணத்துக்காக பெண் கொலை உறவினர் உட்பட இருவர் கைது


ADDED : மே 29, 2025 11:00 PM

Google News

ADDED : மே 29, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டன்பேட்,: தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த சம்பவத்தில், அந்த பெண்ணின் உறவினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, காட்டன்பேட்டின் தர்கா சாலையில் வசிப்பவர் பிரகாஷ். இவர், 'ஹோல்சேல்' துணி வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி லதா, 40. தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகள் படிப்பை முடித்து, தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றுகிறார்; மகன் பள்ளியில் படிக்கிறார். இவர்களின் குடும்பம் பீதரில் இருந்து, பல ஆண்டுகளுக்கு முன், பெங்களூருக்கு குடி பெயர்ந்தது.

கழுத்து நெரித்து


மகளுக்கு திருமணம் செய்ய, தம்பதி தங்க நகைகளை சேர்த்து வைத்துள்ளனர். கடந்த 26ம் தேதி காலையில், கணவர் கடைக்கும், மகள் பணிக்கும், மகன் பள்ளிக்கும் சென்றிருந்தனர். லதா தனியாக இருந்தார். காலை 11:00 மணியளவில், வீட்டுக்குள் வந்த மர்மநபர்கள், லதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பீரோவில் மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு மொபைல் போனை கொள்ளை அடித்து கொண்டு தப்பியோடினர்.

கணவர் பிரகாஷ், மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்த போது, மனைவி கொலை செய்யப்பட்டதும், நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதும் தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணையை துவக்கினர்.

பல கோணங்களில் விசாரணை நடத்தி பீதரின் புரந்தரா, 42, இவரது நண்பர் சிவப்பா, 35, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

எலக்ட்ரீஷியன்


லதா குடும்பத்தினருக்கு உறவினரான புரந்தரா, அவ்வப்போது வீட்டுக்கு வருவார். பீதரில் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றிய இவர், யாரையோ நம்பி, தீய பழக்கத்தால் பெருமளவில் பணத்தை இழந்தார். தன் உறவினரான துணி வியாபாரி பிரகாஷ் வீட்டில் பணம், நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டு, கொள்ளையடிக்க தன் நண்பர் சிவப்பாவுடன் சேர்ந்து, திட்டம் தீட்டினார்.

அதன்படி பெங்களூருக்கு வந்தனர். மே 26ம் தேதி, பிரகாஷின் வீட்டுக்கு சென்றனர். அவரது மனைவி லதா, புரந்தராவையும், அவரது நண்பரையும் வரவேற்று உபசரித்தார். சிற்றுண்டி கொடுத்தார். அதை தின்றுவிட்டு, லதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பணம், நகைகளை திருடிக்கொண்டு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் பீதருக்கு சென்றது, விசாரணையில் தெரிந்தது.

இவர்களிடம் இருந்து, பணம், தங்க நகைகளை மீட்க போலீசார் தயாராகின்றனர்.






      Dinamalar
      Follow us