sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மைசூரு அரண்மனையில் யோகா ஒத்திகை

/

மைசூரு அரண்மனையில் யோகா ஒத்திகை

மைசூரு அரண்மனையில் யோகா ஒத்திகை

மைசூரு அரண்மனையில் யோகா ஒத்திகை


ADDED : ஜூன் 15, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று ஒத்திகை நடந்தது.

சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில் நடக்கும் யோகாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

அதுபோன்று, 11வது ஆண்டாக மைசூரு அரண்மனை வளாகத்தில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 'ஒரு உலகம், ஒரு சுகாதாரத்துக்கு யோகா' என்ற கருப்பொருளில் இந்தாண்டு யோகா நடக்கிறது.

மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று ஆயுஷ் துறை சார்பில் யோகா ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, யோகா மையம், என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., சாரணர் - சாரணியர், ஆயுஷ் துறை அதிகாரிகள் என 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தட் ஆசனம், விருக் ஷாசனம், பாதஹஸ்தாசனம், அர்தா சக்ராசனம், திரகோணாசனம், பத்ராசனம், வஜ்ராசனம் என ஆசனங்கள் செய்தனர். காலையில் லேசான மழை சாரல் பெய்தபோதும், பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்தாண்டு நடக்கும் யோகாவில், 15 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us