ADDED : ஜூலை 03, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், வங்கிகளுக்கு விரைவான தரவுகளும் கிடைக்கும் வகையில், சிபில் போன்ற கடன் தகவல் வழங்கும் நிறுவனங்கள், 'ரியல் டைம்' எனப்படும் உடனடி தரவுகளை வழங்க வேண்டும்.
இரு வாரங்களுக்கு ஒருமுறை தரவுகளை வழங்கும் தற்போதைய நடைமுறையில் இருந்து மாற வேண்டும். அப்டேட் உலகமாகி விட்ட சூழலில், உடனுக்குடன் தரவு கிடைப்பது கடன் வணிகம் மேம்பட உதவும். வாடிக்கையாளரின் கடன் அடைத்தல், செலுத்திய தவணைகள் உள்ளிட்டவை, உடனுக்குடன் தரவுகளில் பிரதிபலித்தால் சிறப்பாக இருக்கும்.
- ராஜேஸ்வர் ராவ்
துணை கவர்னர்,
ரிசர்வ் வங்கி