உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 17, 2026 04:13 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: 7-: மத்திய அரசு, வெள்ளி, வெள்ளி மீது தங்கம் அல்லது பிளாட்டினம் பூச்சு உள்ள பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இதுவரை இவ்வகை நகைகளுக்கு தனியாக அனு மதி வேண்டியதில்லை. புதிய கட்டுப்பாட்டின்படி, வெள்ளி இறக்குமதிக்கு தனியாக மத்திய அரசின் அனுமதி தேவை என்று வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த 13ம் தேதியன்றுதான் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது வெள்ளியும் 'கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள்' என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உரிமம் பெற்றவர்கள் மட்டுமே வெள்ளியை இறக்குமதி செய்ய முடியும்.
