ADDED : ஜூலை 31, 2024 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் நேற்று டில்லி வந்தடைந்தார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வியட்நாம் நாட்டின் பிரதமர் பாம் மின் சின் நேற்று டில்லி வந்திறங்கினார். அவரை மத்திய அமைச்சர், வியட்நாம் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
இன்று காலை டில்லியில் தேசதந்தை காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார். தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.