sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொய் சொல்கிறது ஏர் இந்தியா: வெளுத்து வாங்கினார் பாடகர் ரிக்கி கேஜ்

/

பொய் சொல்கிறது ஏர் இந்தியா: வெளுத்து வாங்கினார் பாடகர் ரிக்கி கேஜ்

பொய் சொல்கிறது ஏர் இந்தியா: வெளுத்து வாங்கினார் பாடகர் ரிக்கி கேஜ்

பொய் சொல்கிறது ஏர் இந்தியா: வெளுத்து வாங்கினார் பாடகர் ரிக்கி கேஜ்


UPDATED : ஆக 03, 2024 04:24 PM

ADDED : ஆக 03, 2024 04:21 PM

Google News

UPDATED : ஆக 03, 2024 04:24 PM ADDED : ஆக 03, 2024 04:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: ஏர் இந்தியா விமான சேவை மீது, 3 முறை கிராமி விருது வென்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர்


பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், இன்று காலை மும்பையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். இதற்காக, விமான நிலையம் வந்த அவர், அங்கு காத்திருந்துள்ளார். அப்போது, பிசினஸ் வகுப்பு டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரிக்கி கேஜை, எகானமி வகுப்பில் பயணிக்குமாறு கூறிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர், அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவமரியாதை

இதனால், ஏற்பட்ட விரக்தியை எக்ஸ் தளத்தில் ரிக்கி கேஜ் வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவில், 'இந்த ஓராண்டில் 3வது முறையாக எனக்கு இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. பிசினஸ் வகுப்பில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். பெங்களூரூ செல்வதற்காக, மும்பை விமான நிலையம் சென்றிருந்தேன். அங்கு கவுண்டரில் இருந்த நிஷிதா சிங் என்ற ஊழியர், என்னை எகானமி வகுப்பில் செல்லுமாறு கூறியதுடன், அவமரியாதையுடன் நடந்து கொண்டார்.

தங்களின் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை ஏர் இந்தியா நிறுவனம் தெரிந்து கொள்ள வேண்டும். நான் தற்போதும் விமான நிலையத்தில் தான் இருக்கிறேன். ஆனால், காலை 9.25 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்று விட்டது, எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட தனக்கு எவ்வளவு தொகை திரும்பக் கிடைக்கும் என்றும், இதற்காக தான் என்ன செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

சுத்தப்பொய்

அவரது பதிவுக்கு பதிலளித்திருந்த ஏர் இந்தியா நிறுவனம், உங்களுக்கான தீர்வை வழங்குவது பற்றி மெசேஜ் செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதுவரையில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும், சமூகவலைதளத்தில் ஏர் இந்தியா நிறுவனம் பொய் சொல்வதாக ரிக்கி கேஜ் பதில் பதிவு போட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us