முடிவுக்கு வந்தது நன்னடத்தை விதிகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
முடிவுக்கு வந்தது நன்னடத்தை விதிகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ADDED : ஜூன் 06, 2024 07:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நாடு முழுதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற லோக்சபா தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்துவது என கடந்த மார்ச் 16-ம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தேர்தல் தேதியை வெளியிட்டது. இதையடுத்து அன்று முதல் நாடு முழுதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 01ம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் நிறைவடைந்து, ஜூன் 04-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. முடிவுகள் வெளியானநிலையில், நாடு முழுதும் அமலில் இருந்த தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக இன்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.