sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துணை கலெக்டரான விவசாயி மகள்

/

துணை கலெக்டரான விவசாயி மகள்

துணை கலெக்டரான விவசாயி மகள்

துணை கலெக்டரான விவசாயி மகள்


ADDED : ஜூன் 09, 2024 11:48 PM

Google News

ADDED : ஜூன் 09, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்துார்: மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்தவர் ப்ரியல் யாதவ், 27; விவசாயி மகளான இவர், ம.பி., அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் ஆறாம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இது குறித்து ப்ரியல் யாதவ் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். உறவினர்கள் நிர்பந்தம் காரணமாக பிளஸ் 1 வகுப்பில் விருப்பமின்றி இயற்பியல், வேதியியல், கணிதம் பாடத்தில் சேர்ந்தேன். ஆர்வம் இல்லாததால் பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தேன்.

அதுவே என் முதலும் கடைசியுமான தோல்வி. கடந்த 2019ல் நடந்த ம.பி., அரசுப் பணியாளர் தேர்வில் 19ம் இடம் பிடித்து மாவட்ட பதிவாளர் பணிக்கு தேர்வானேன். அதன் பின், 2020ல் தேர்வு எழுதி 34வது இடத்தில் தேர்ச்சி பெற்று கூட்டுறவுத்துறையின் உதவி கமிஷனர் ஆனேன்.

கடந்த 2021ல் ம.பி., அரசுப் பணியாளர் தேர்வு எழுதினேன். இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில், ஆறாம் இடத்தில் தேர்ச்சி பெற்றதால், துணை கலெக்டர் பணி கிடைத்துள்ளது.

யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., ஆவதே என் லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us