sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காளைகள் வாங்க விவசாயிகள் ஆர்வம்

/

காளைகள் வாங்க விவசாயிகள் ஆர்வம்

காளைகள் வாங்க விவசாயிகள் ஆர்வம்

காளைகள் வாங்க விவசாயிகள் ஆர்வம்


ADDED : ஜூன் 01, 2024 06:33 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்தாண்டு போதுமான மழை பெய்யவில்லை. வறட்சி மக்களை வாட்டியது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மாநிலத்தின் 200 மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டன. தண்ணீர் இல்லாததால், மாடுகளுக்கு தீவனம் விளைவிக்க முடியவில்லை.

மாடுகளை, குறிப்பாக காளைகளை வளர்க்க விவசாயிகளால் முடியவில்லை. குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர். தற்போது மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பயிரிட தயாராகின்றனர். ஆனால் நிலத்தை உழுது, பதப்படுத்த காளைகள் இல்லை.

புதிதாக காளைகள் வாங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் விலை மிகவும் அதிகம் உள்ளது. இரட்டை காளைகளின் விலை ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

மாடுகள் வாங்க வரும் விவசாயிகள், விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்து வாங்காமல் திரும்புகின்றனர். சிலர் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று மாடுகள் வாங்குகின்றனர்.






      Dinamalar
      Follow us