sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரில் தீயை கட்டுப்படுத்தும் 'ரோபோ' வருகை

/

பெங்களூரில் தீயை கட்டுப்படுத்தும் 'ரோபோ' வருகை

பெங்களூரில் தீயை கட்டுப்படுத்தும் 'ரோபோ' வருகை

பெங்களூரில் தீயை கட்டுப்படுத்தும் 'ரோபோ' வருகை


ADDED : ஜூலை 09, 2024 01:03 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, கர்நாடக மாநில தீயணைப்பு துறை வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரில் தீ விபத்து ஏற்படும்போது, குறுகலான இடங்களில் தீயை கட்டுப்படுத்தவும், அபாயத்தில் சிக்கியவர்களை காப்பாற்றவும், ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த பணிக்காக, விரைவில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ரோபோ வாங்கப்படும். 1 கோடி ரூபாய் செலவில், இதை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இறுதிக்குள், தீயணைப்பு துறையில் இந்த ரோபோ சேரும். தீயை அணைக்க ரோபோ பயன்படுத்துவது புதிய விஷயம் அல்ல. டில்லி, மும்பை, ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ளன.

குறுகலான சாலைகள், குடோன், பல மாடி கட்டடங்கள் உட்பட சிக்கலான இடங்களில் தீயை கட்டுப்படுத்துவது, ஊழியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இத்தகைய இடங்களில் தீயை கட்டுப்படுத்த, ரோபோ உதவியாக இருக்கும். ரோபோவில் தீ பிடிக்காத போர்வை, எலக்ட்ரிக் கண்கள் என, அனைத்து வசதிகளும் இருக்கும்.

திடீரென தீப்பிடிக்கும்போது, உயிர் சேதங்களை தடுக்க உதவியாக இருக்கும். இது, 100 அடி துாரம் வரை, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் திறன் கொண்டது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us