sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வயநாடு நிலச்சரிவில் சாம்ராஜ் நகர் குடும்பங்கள் மாயம்: மீட்பு பணிக்கு கர்நாடக குழு

/

வயநாடு நிலச்சரிவில் சாம்ராஜ் நகர் குடும்பங்கள் மாயம்: மீட்பு பணிக்கு கர்நாடக குழு

வயநாடு நிலச்சரிவில் சாம்ராஜ் நகர் குடும்பங்கள் மாயம்: மீட்பு பணிக்கு கர்நாடக குழு

வயநாடு நிலச்சரிவில் சாம்ராஜ் நகர் குடும்பங்கள் மாயம்: மீட்பு பணிக்கு கர்நாடக குழு


ADDED : ஜூலை 31, 2024 05:25 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில், கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரின் சில குடும்பங்கள் மாயமாகி உள்ளன. மீட்பு பணிக்காக, கர்நாடக அரசு சார்பில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையிலான மீட்பு குழு சென்றுள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவின் வயநாட்டில், நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டு, 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மண்ணில் புதைந்ததால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

வயநாட்டின் முண்டகை டீ எஸ்டேட் பகுதியில் நடந்த நிலச்சரிவில், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் பகுதியை சேர்ந்த ஜான்சிராணி, இவரது இரண்டரை வயது மகன் நிஹால் ஆகியோர் மாயமாகி உள்ளனர்.

இதுபோன்று, சூரல்மல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், சாம்ராஜ்நகர் மாவட்டம், சோம்வார்பேட்டையை சேர்ந்த ரத்னம்மா, ராஜேந்திரா தம்பதியை காணவில்லை. இதனால், இவர்களின் குடும்பத்தினர் பீதியில் உள்ளனர். மேலும் கர்நாடகாவை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் வயநாடு விடுதிகளில் தங்கி இருந்ததாகவும், அவர்களின் நிலை தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, டில்லியில் நேற்று கூறியதாவது:

வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கர்நாடகா சார்பில் இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். மாநில அரசு சார்பில், மீட்பு பணிக்காக ஜே.சி.பி., கிரேன் உட்பட 15 கனரக வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

பெங்களூரு ஹலசூரில் இருந்து, 100 ராணுவ வீரர்கள், நான்கு அதிகாரிகள், 40 வாகனங்களுடன் மீட்பு பணிக்கு கேரளாவுக்கு சென்றுள்ளனர். பெங்களூரில் இருந்து தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவ குழுக்களை அழைத்து வருவதற்கு, எச்.டி.கோட்டேவில் பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வயநாட்டில் கன்னடர்கள் சிக்கி தவிப்பதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்கும் பணியில் அரசு ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.

மீட்பு பணியை ஒருங்கிணைக்க, கர்நாடக அரசு சார்பில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பி.சி.ஜாப்பர் - 9448355577, திலீஷ் சசி - 9446000514 ஆகியோர் வயநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

2 பெண்கள் பலி


மெப்படி பகுதியில் நடந்த நிலச்சரிவில் சாம்ராஜ் நகரை சேர்ந்த புட்டசித்தி உட்பட இரண்டு பெண்கள் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்று, ராஜன் -- ரஜினி என்ற தம்பதியும் காணாமல் போனதாக சாம்ராஜ் நகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொலைபேசி எண்கள்


சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் பலரும் வயநாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அத்தகையோர் காணாமல் போனால், யாருக்காவது தகவல் தெரிந்தால், 08226 223161/63/60 ஆகிய தொலைபேசி எண்களிலும்; 9740942902 என்ற, 'வாட்ஸாப்' எண்ணிலும் 24 மணி நேரமும் தகவல் அளிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

போக்குவரத்துக்கு தடை

சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டை மார்க்கமாக, பெங்களூரில் இருந்து வயநாடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 766 மார்க்கத்தில், முன்னெச்சரிக்கையாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையாக, குண்டுலுபேட்டை - பந்திப்பூர் - கூடலுார் வழியாக செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us