sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பள்ளி, அங்கன்வாடிகளில் தரமற்ற உணவு மாணவர்கள், சிறார்கள் சாப்பிட மறுப்பு

/

பள்ளி, அங்கன்வாடிகளில் தரமற்ற உணவு மாணவர்கள், சிறார்கள் சாப்பிட மறுப்பு

பள்ளி, அங்கன்வாடிகளில் தரமற்ற உணவு மாணவர்கள், சிறார்கள் சாப்பிட மறுப்பு

பள்ளி, அங்கன்வாடிகளில் தரமற்ற உணவு மாணவர்கள், சிறார்கள் சாப்பிட மறுப்பு


ADDED : ஜூன் 04, 2024 05:12 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : அங்கன்வாடி மையங்களில், கடந்த ஆறு மாதமாக தரமற்ற உணவை வழங்குகின்றனர். இதனால் சிறார்கள், கர்ப்பிணியர், குழந்தை பெற்ற பெண்கள் அங்கன்வாடிகளின் உணவை நிராகரிக்கின்றனர்.

சுவையான உணவு


கர்நாடகாவின் அங்கன்வாடிகள் மூலமாக சிறார்கள், கர்ப்பிணியர், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படுகிறது.

இதற்கு முன் வேகவைத்த முட்டை, சாதம், காய்கறி சாம்பார், உப்புமா, பாசிப்பருப்பு பாயசம், கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. தரமான, சுவையான உணவாக இருந்ததால், சிறார்கள் விரும்பி சாப்பிட்டனர்.

தற்போது உணவு மெனு மாற்றப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள், சாதம், சாம்பார், மூன்று நாட்கள் உப்புமா வழங்கப்படுகிறது. தினமும் புஷ்டி பவுடர், கேழ்வரகு லட்டுகள் வழங்கப்படுகின்றன. முட்டை, பால் பவுடர் வழங்குவதாக குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் ஆறு மாதமாக, சிறார்களுக்கு சாதம், சாம்பார், உப்புமா மட்டுமே வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முட்டையோ, பால் பவுடரோ அங்கன்வாடிகளில் வழங்கப்படுவது இல்லை. உப்புமா, சாதம், சாம்பாரும் தரமானதாக இல்லை. கலப்பட உணவு தானியங்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

அழுகிய முட்டை


அங்கன்வாடிகள் மட்டுமின்றி, பள்ளிகளிலும் வழங்கப்படும் மதிய உணவும் சுகாதாரமாக இருப்பதில்லை. புழுக்கள் உள்ள அரிசி, பருப்பு, அழுகிய காய்கறிகள் பயன்படுத்துவது, பலமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமீபத்தில் பள்ளி ஒன்றில், அழுகிய முட்டைகள் வழங்கியது சமூக வலைதளத்தில் பரவியது. பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்படையும் சம்பவங்கள் நடக்கின்றன.

சில நாட்களுக்கு முன், துமகூரில் பள்ளி ஒன்றில், மதிய உணவு சாப்பிட்ட இரண்டு ஆசிரியர்கள் உட்பட, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். உணவு தரமாக இல்லாததால், அங்கன்வாடிகள், பள்ளிகளில் சிறார்கள், மாணவர்கள் மதிய உணவு சாப்பிட மறுக்கின்றனர்.

ஒரே விதமான மெனு


இதற்கு முன் அந்தந்த மாவட்டங்களின், துணை கமிஷனர்கள் தலைமையிலான கமிட்டி, அந்தந்த பகுதிகளில் விளையும் உணவு தானியங்களை வினியோகிக்க, டெண்டர் அழைக்கப்பட்டது.

இயற்கையான முறையில் தயாரான வெல்லம், பாசிப்பருப்பு, கடலைக்காய் உட்பட, மற்ற தானியங்கள் வாங்கப்பட்டன.

ஆனால் தற்போதைய புதிய விதிமுறைப்படி, மொத்த மாநிலத்திலும் பள்ளிகளில் ஒரே விதமான உணவு மெனு பின்பற்றப்படுகிறது.

ஆந்திராவை சேர்ந்த ஒரே ஏஜென்சி உணவு தானியங்களை சப்ளை செய்கிறது. இந்த ஏஜென்சி தரமற்ற தானியங்களை வழங்குவதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us