sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கணவரை கொன்ற மனைவி காட்டிக்கொடுத்தாள் மகள்

/

கணவரை கொன்ற மனைவி காட்டிக்கொடுத்தாள் மகள்

கணவரை கொன்ற மனைவி காட்டிக்கொடுத்தாள் மகள்

கணவரை கொன்ற மனைவி காட்டிக்கொடுத்தாள் மகள்


ADDED : ஜூன் 23, 2024 06:33 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: சிக்கமகளூரு கடூரின் தொட்டி பீரனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ஜெயண்ணா, 42. இவர் 'டைல்ஸ்' பதிக்கும் வேலை செய்தார். இவரது மனைவி ஸ்ருதி, 35. ஆரோக்கியமாக இருந்த ஜெயண்ணா, 15ல் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்தார்.

கணவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்; மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் குணமாகவில்லை என, ஸ்ருதி அக்கம், பக்கத்தினரிடம் கூறினார். இறுதிச்சடங்குகளுக்கும் ஏற்பாடு செய்தார்.

ஆனால் ஜெயண்ணாவின் உறவினர்களுக்கு, இவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அவரது 13 வயது மகளிடம் கேட்டபோது, ''என் அப்பாவை மருத்துவமனைக்கு, அம்மா அழைத்துச் செல்லவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அப்பா இறக்கும் வரை, காரிலேயே சுற்றினார்,'' என கூறினார்.

உறவினர்கள் இதுகுறித்து, சகராயபட்டணா போலீசாரிடம் தெரிவித்தார். போலீசாரும் கிராமத்துக்கு வந்து, ஜெயண்ணாவின் உடலை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர். அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

ஸ்ருதிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கிரண், 27, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இவர், ஸ்ருதிக்கு மகன் உறவு. இதை அறிந்த ஜெயண்ணா, மனைவியை கண்டித்தார். எனவே ஸ்ருதி, கணவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றதை, மகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

ஸ்ருதி, கிரணை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us