sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உலகின் உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி

/

உலகின் உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி

உலகின் உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி

உலகின் உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி

1


UPDATED : ஜூன் 18, 2024 08:55 AM

ADDED : ஜூன் 18, 2024 12:43 AM

Google News

UPDATED : ஜூன் 18, 2024 08:55 AM ADDED : ஜூன் 18, 2024 12:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரில், செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தின் மீது, சங்கல்தான் - ரியாசி இடையே ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. Image 1282792ஆற்றின் மேல், 1,178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், உலகின் மிக உயரமான ரயில் பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட, 115 அடி அதிக உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த அதிசய பாலம், 'லிம்கா' சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.Image 1282793

ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், சங்கல்தான் - ரியாசி இடையே ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, செனாப் பாலத்தின் மீது முதல் முறையாக ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us