sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும்: ராகுல் சாடல்

/

பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும்: ராகுல் சாடல்

பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும்: ராகுல் சாடல்

பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும்: ராகுல் சாடல்

66


UPDATED : ஜூன் 18, 2024 02:48 PM

ADDED : ஜூன் 18, 2024 12:56 PM

Google News

UPDATED : ஜூன் 18, 2024 02:48 PM ADDED : ஜூன் 18, 2024 12:56 PM

66


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பைனான்சியல் டைம்ஸ் ஆங்கில இதழுக்கு ராகுல் அளித்த பேட்டி: மோடி தலைமையிலான அரசு எளிதாக உடையக்கூடியது. சிறிய இடையூறு ஏற்பட்டால் கூட அரசு கவிழ்ந்துவிடும். பிரதமர் மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான அடக்குமுறைகள் நிகழாமல் நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால், இண்டியா கூட்டணி எந்த சந்தேகமும் இன்றி பெரும்பான்மையை வென்றிருக்கும்.

ஆபத்து

அங்கு அதிருப்தியில் உள்ளவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். சிறிய குழப்பம் ஏற்பட்டால் கூட மத்தியில் உள்ள தே.ஜ., கூட்டணி அரசுக்கு ஆபத்து. வெறுப்பையும், கோபத்தையும் பரப்பி, அதன் மூலம் பலனைப் பெறலாம் என பா.ஜ., நினைத்தது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., பயன்படுத்திய மதம் மற்றும் வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர். இவ்வாறு ராகுல் கூறினார்.

நீட் முறைகேடு

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ., ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பதில் கூறாமல் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.
நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடும். பார்லிமென்டிலும், மக்கள் மன்றத்திலும் வலுவாக குரல் எழுப்புவோம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us