sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்

/

வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்

வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்

வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்


ADDED : ஜூன் 02, 2025 06:01 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத மழையால் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



மே 29ம் தேதி முதல் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. மழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

கிட்டத்தட்ட 19 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 4 லட்சம் பேரை கனமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் பாதித்துள்ளது. கனமழைக்கு அதிகபட்சமாக கச்சார் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு மட்டும் 1.03 லட்சம் மக்கள் மழை, வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 10,000க்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காணப்படுவதால் அரசின் உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களை சென்று சேருவதில் சிக்கல் நிலவுகிறது.

அசாம் மாநிலத்திலேயே பெரிய நகரமான சில்ச்சார் நகரத்தில் 24 மணி நேரத்தில் 415.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 1893ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் அங்கு ஒரே நாளில் அதிக மழை பதிவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 132 ஆண்டுகள் கழித்து இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us