sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் வங்கதேசத்தினர் 92 பேர் கைது; சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை!

/

டில்லியில் வங்கதேசத்தினர் 92 பேர் கைது; சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை!

டில்லியில் வங்கதேசத்தினர் 92 பேர் கைது; சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை!

டில்லியில் வங்கதேசத்தினர் 92 பேர் கைது; சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை!

8


UPDATED : மே 27, 2025 05:32 PM

ADDED : மே 27, 2025 05:30 PM

Google News

8

UPDATED : மே 27, 2025 05:32 PM ADDED : மே 27, 2025 05:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, தென்மேற்கு டில்லியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர்.

அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் சிலர் இந்தியா- வங்கதேச எல்லையில் உள்ள ஆறுகளைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை ஒப்புக்கொண்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை டில்லியில் சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us