sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான வரியை நீக்குங்கள்: நிர்மலாவுக்கு நிதின் கட்கரி கடிதம்

/

ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான வரியை நீக்குங்கள்: நிர்மலாவுக்கு நிதின் கட்கரி கடிதம்

ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான வரியை நீக்குங்கள்: நிர்மலாவுக்கு நிதின் கட்கரி கடிதம்

ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான வரியை நீக்குங்கள்: நிர்மலாவுக்கு நிதின் கட்கரி கடிதம்

21


UPDATED : ஜூலை 31, 2024 05:59 PM

ADDED : ஜூலை 31, 2024 04:01 PM

Google News

UPDATED : ஜூலை 31, 2024 05:59 PM ADDED : ஜூலை 31, 2024 04:01 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிமீயங்கள் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக கடந்த 28 ம் தேதி எழுதிய கடிதத்தில் நிதின் கட்கரி கூறியுள்ளதாவது: மூத்த குடிமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரிமீயங்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டுத் திட்ட பிரீமியத்தின் மீதான 18 சதவீத வரி என்பது சமூக ரீதியாக அவசியமாகக் கருதப்படும் வணிகப் பிரிவினரின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக உள்ளது. இந்த துறையின் வளர்ச்சி சமூகத்திற்கு அவசியமானது.

பிரிமீயத்தின் மீது ஜிஎஸ்டி விதிப்பது என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்கு சமம். குடும்பத்திற்கு சில பாதுகாப்பை வழங்குவதற்காக வாழ்க்கையின் நிச்சயமற்ற அபாயத்தை உள்ளடக்கிய நபர். இந்த அபாயத்திற்கு எதிராக காப்பீட்டை வாங்குவதற்கான பிரீமியத்திற்கு வரி விதிக்கப்படக்கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் நிதின் கட்கரி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us