ADDED : ஜூன் 22, 2025 09:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கொலை வழக்கில், ஓராண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
டில்லி ஷாபாத் டெய்ரியில், 2024ம் ஆண்டு ஜூன், 30ம் தேதி சன்னி,28, என்பவர் கொலை செய்யப்பட்டார். விசாரணை நடத்திய போலீசார் அஜய் மற்றும் ஜூபர் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர். உத்தரப் பிரதேசத்தின், ஷாஜஹான்பூர் அருகே ஜூபர் நேற்று கைது செய்யப்பட்டார். அஜயை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக சன்னியை கொலை செய்ததை, ஜூபர் ஒப்புக் கொண்டார்.