sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்

/

ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்

ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்

ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்

3


UPDATED : ஜூன் 20, 2025 05:28 PM

ADDED : ஜூன் 20, 2025 04:59 PM

Google News

3

UPDATED : ஜூன் 20, 2025 05:28 PM ADDED : ஜூன் 20, 2025 04:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: பறவை மோதியதால், புனேவில் இருந்து டில்லிக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் விமானம் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் தரையில் இருந்தவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து விமானங்களை சோதனை செய்ய ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களினால், ஏர் இந்தியாவின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில் டில்லியில் இருந்து மஹாராஷ்டிராவின் புனே நகருக்கு ஏர் இந்தியாவின் AI 2470 விமானம் இன்று வந்தது. விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் அதில் பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் புனேயில் இருந்து டில்லி செல்வது ரத்து செய்யப்பட்டு உள்ளது. விமானத்தை ஏர் இந்தியா பொறியாளர்கள் முழுமையாக சோதனை செய்து வருகின்றனர்.



இதனையடுத்து டில்லி செல்ல வேண்டிய பயணிகளுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளின் வசதிக்கு ஏற்ப டிக்கெட் ரத்து அல்லது வேறு நாளில் பயணம் ஏற்பாடு செய்து தரப்படும் எனத் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us