sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குழந்தைகள் கல்விக்கு ரூ.15,000 தருது ஆந்திரா

/

குழந்தைகள் கல்விக்கு ரூ.15,000 தருது ஆந்திரா

குழந்தைகள் கல்விக்கு ரூ.15,000 தருது ஆந்திரா

குழந்தைகள் கல்விக்கு ரூ.15,000 தருது ஆந்திரா


ADDED : ஜூன் 14, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி : ஆந்திராவில், பள்ளி செல்லும் மாணவ- - மாணவியரின் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும், 15,000 ரூபாய் வழங்கும், 'தள்ளிக்கி வந்தனம்' திட்டத்தை மாநில அரசு துவங்கியுள்ளது.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது சந்திரபாபு நாயுடு, 'சூப்பர் சிக்ஸ்' நலத்திட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட ஆறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில், 'தள்ளிக்கி வந்தனம்' என்ற திட்டமும் இடம்பெற்றது.

அதாவது, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- - மாணவியரின் தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுதோறும், 15,000 ரூபாய் வழங்குவதே, 'தள்ளிக்கு வந்தனம்' எனப்படும், 'தாய்க்கு வணக்கம்' திட்டம். இதற்காக ஆந்திர அரசு, 8,475 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

இதுகுறித்து அரசு செயலர் கோனா சசிதர் கூறுகையில், ''இத்திட்டத்தால் 67 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், 43 லட்சம் தாய்மார்களும் பயனடைவர். இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பயனடையும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us